"இந்தியாவிலேயே முதன் முறையாக
அறுவை சிகிச்சை மற்றும் வலி மாத்திரைகள் இன்றி மூட்டு மற்றும் தண்டுவட நோய்களுக்காக அர்ப்பணிக்க பட்ட ஓர் இந்திய முறை மருத்துவமனை"
ஸ்ரீ ராகவேந்திரா மருத்துவமனை சித்த மருத்துவத்தின் அடையாளம்
"அறுவை சிகிச்சை இல்லை! வலி மாத்திரைகள் இல்லை!
சித்தா, ஆயுர்வேதா மற்றும் வர்மா போன்ற இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளை ஒருங்கிணைந்து வடிவமைக்கப்பட்ட உன்னத சிகிச்சை"
ஸ்ரீ ராகவேந்திரா மருத்துவமனை சித்த மருத்துவத்தின் அடையாளம்
"100% பாதுகாப்பானது! பின்விளைவுகளற்றது !
முறையான கல்வித்தகுதியும், மத்திய மாநில மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரமும் தேர்ந்த அனுபவமும் பெற்ற மருத்துவ நிபுணர்களால்
ஸ்ரீ ராகவேந்திரா மருத்துவமனை சித்த மருத்துவத்தின் அடையாளம்

"இந்தியாவிலேயே முதன் முறையாக
அறுவை சிகிச்சை மற்றும் வலி மாத்திரைகள் இன்றி மூட்டு மற்றும் தண்டுவட நோய்களுக்காக அர்ப்பணிக்க பட்ட ஓர் இந்திய முறை மருத்துவமனை"
ஸ்ரீ ராகவேந்திரா மருத்துவமனை சித்த மருத்துவத்தின் அடையாளம்
"அறுவை சிகிச்சை இல்லை! வலி மாத்திரைகள் இல்லை! சித்தா, ஆயுர்வேதா மற்றும் வர்மா போன்ற இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளை ஒருங்கிணைந்து வடிவமைக்கப்பட்ட உன்னத சிகிச்சை"
ஸ்ரீ ராகவேந்திரா மருத்துவமனை சித்த மருத்துவத்தின் அடையாளம்
"100% பாதுகாப்பானது! பின்விளைவுகளற்றது ! முறையான கல்வித்தகுதியும், மத்திய மாநில மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரமும் தேர்ந்த அனுபவமும் பெற்ற மருத்துவ நிபுணர்களால்
ஸ்ரீ ராகவேந்திரா மருத்துவமனை சித்த மருத்துவத்தின் அடையாளம்
"இந்தியாவிலேயே முதன் முறையாக
அறுவை சிகிச்சை மற்றும் வலி மாத்திரைகள் இன்றி மூட்டு மற்றும் தண்டுவட நோய்களுக்காக அர்ப்பணிக்க பட்ட ஓர் இந்திய முறை மருத்துவமனை"
ஸ்ரீ ராகவேந்திரா மருத்துவமனை சித்த மருத்துவத்தின் அடையாளம்
"இந்தியாவிலேயே முதன் முறையாக
அறுவை சிகிச்சை மற்றும் வலி மாத்திரைகள் இன்றி மூட்டு மற்றும் தண்டுவட நோய்களுக்காக அர்ப்பணிக்க பட்ட ஓர் இந்திய முறை மருத்துவமனை"
ஸ்ரீ ராகவேந்திரா மருத்துவமனை சித்த மருத்துவத்தின் அடையாளம்
நியமனம் மூலம் ஆலோசனை


96000 37028
98404 40037
96775 90037

ஆலோசனை நேரங்கள்
  • திங்கட் கிழமை – சனிக் கிழமை
  • காலை:
    10:00 AM - 1:00 PM
  • மாலை:
    5:00 PM - 8:00 PM
  • ஞாயிற்றுக் கிழமை:
    9:00 AM -12:00 PM
img1
அன்புடன் உங்களோடு
மகத்துவமிக்க மண்ணின் மருத்துவம்
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சித்தர்களும், யோகிகளும், ஞானிகளும், தங்களுடைய தவ வலிமையாலும், மெய்ஞானத்தாலும், உணரப்பட்டு, அறிவியல் அடிப்படையில் பயிற்றுவிக்கபட்ட நமது தாய் மண்ணின் உற்பத்தி தான் சித்த மருத்துவம். உலக மக்களுக்கு இறைவனால் அருளப்பட்ட இந்த மருத்துவம், வானியல், மண்ணியல், உடலியல், உயிரியல், சோதிடம், தந்திரம், மாந்திரீகம், போன்ற பல அறிவியல் யுக்திகளை உள்ளடக்கி, நமது முன்னோர்களின் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும், பிரதிபலித்து உலகின் வேறு எந்த மருத்துவத்திற்கும் இல்லாத தனி சிறப்புடன் விளங்கி வருகிறது.

நவீன வாழ்க்கை முறை மாற்றமும், எந்திரதனமான வாழ்க்கையும், அனைத்து தரப்பு மக்களையும், பலவிதமான நோய்களிலும், மருந்துகளிலும், சிக்கி தவிக்க வைக்கிறது. நோய்கள் வராமல்முன்கூட்டியே தடுப்பதற்கும், வந்த நோய்களை விரைவாக குணப்படுத்தி மருந்துகளின் தேவையை குறைப்பதற்கும் சித்த மருத்துவம் ஓர் அரிய வாய்ப்பாக விளங்குகிறது.

நவீன மருத்துவத்திற்கு சவாலாக விளங்கக்கூடிய பல நோய்களுக்கு, நமது பாரம்பரிய மருத்துவ யுக்திகளை பயன்படுத்தி தீர்வு அளிப்பதற்கு, அறிவியல் பூர்வமான ஆராய்ச்சியும், ஆதாரம் மிக்க சிகிச்சையும் தேவை என்பதை நாங்கள் நன்கு உணர்ந்துள்ளோம். அதற்காகவே நமது மருத்துவமனையுடன் இணைந்து செயல்படும், மருத்துவ ஓலைச்சுவடி ஆய்வுமையத்தில் சித்த மருத்துவ வல்லுநர்கள், வர்ம மருத்துவ நிபுணர்கள், தமிழ் அறிஞர்கள், சுவடி ஆய்வாளர்கள் இணைந்து நவீன தொழில் நுட்பத்தின் மூலம் பழங்கால ஓலைச்சுவடிகளிலும், பாரம்பரிய வைத்தியர்களின் மருத்துவ குறிப்புகளிலும், புதைந்து காணப்படுகின்ற மருத்துவ யுக்திகள் ஆய்வு செய்யப்பட்டு பயன் படுத்தப்படுகிறது. இதன் மூலம் பலனுள்ள, பாதுகாப்பான, சிகிச்சைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கி வருகிறோம். கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக எந்த வித விளம்பரமும் இன்றி தரமான சேவையின் மூலம் உலகின் முன்னணி மருத்துவமனையாக விளங்கிவரும் எமது ஸ்ரீராகவேந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நீங்களும் பயனடையுங்கள்.

மருத்துவமனையை பற்றி

இந்தியாவிலேயே முதன் முறையாக மூட்டு மற்றும் தண்டுவட நோய்களுக்கான பிரத்யேக சித்த மருத்துவமனை

ஓலைச்சுவடி ஆராய்ச்சி மையம்

சித்த மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான கணினி மயமாக்கப்பட்ட மருத்துவ ஓலைச்சுவடி நூலகம்

மருந்து செய் நிலையம்

பழங்கால மருத்துவ சுவடிகளில் இருந்தும், பாரம்பரிய மருத்துவர்களின் வைத்திய குறிப்புகளில் இருந்தும் தேர்தெடுக்கப்பட்டு, மருந்துகள் தயார் செய்யப்படுகிறது

எங்களைப் பற்றி
எங்களுடைய சிகிச்சை விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்
சித்த மருத்துவத்தில் நாடி பரிசோதனை என்பது காலத்தால் அழியாத நுட்பமும், துல்லியமும் மிக்க ஓர் நோய் கணிப்பு முறையாகும். நோய்களின் அறிகுறிகளை மட்டும் சுட்டிகாட்டாமல், நோய்களுக்கான ஆணிவேரை முன்கூட்டியே கண்டறியக்கூடிய ஓர் சிறந்த யுக்தியாகும். சித்த மருத்துவத்தின் அடிப்படை கோட்பாட்டின்படி மனித உடலில் ஏற்படுகின்ற அனைத்து நோய்களுக்கும், வாத, பித்த, கபத்தின் தன்னிலை மாறுபாடுகளே அடிப்படை காரணம். முறையான நாடி பரிசோதனை மூலம் உடல் அமைப்பின் தன்மை, உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் இவற்றுடன் நோய்களின் மூல காரணங்களை கண்டறிய முடியும். இந்த நாடி பரிசோதனையானது, தற்போதைய நோய்களை பற்றி மட்டுமில்லாமல் உடல் நலத்தை சிறப்பாக வைத்துக் கொள்வதற்கான ஓர் நுண்ணறிவையும் நமக்கு அளிக்கிறது. பாரம்பரிய மிக்க இந்த நாடி பரிசோதனையுடன் நவீன உடல் பரிசோதனைகளையும் ஒப்பிட்டு நோய்களை துல்லியமாக கணிப்பது நமது மருத்துவமனையின் சிறப்பம்சமாகும்.
நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ்வதற்காக ஆயுர்வேதம் நமக்களித்த ஓர் அரிய வாய்ப்பு தான் பஞ்சகர்மா சிகிச்சை. நோய்களை குணப்படுத்துவது மட்டுமின்றி அவற்றை முன்கூட்டியே தடுத்து நிறைவான ஆரோக்கியத்துடன் விளங்க செய்வது இந்த சிகிச்சையின் முக்கிய நோக்கமாகும். கேரள பாரம்பரிய மிக்க இந்த சிகிச்சை முறையானது, உள் மருந்துகளை சார்ந்திராமல், வெளிப்புற சிகிச்சையின் மூலம் அதிக பலனை அளிப்பதால் உலக அளவில் அங்கீகாரமிக்க சிறந்த சிகிச்சையாக விளங்குகிறது. அபியங்கம், உழிச்சல், பிழிச்சல், சிரோதாரா, சிரோவஸ்தி, நவரை கிழி, இலைக்கிழி, கடிவஸ்தி, லேபனம், கஷாய தாரா, கஷாய வஸ்தி, தளம், உத்வர்த்தனம் போன்ற இந்த சிகிச்சைகள் உடலை உறுதிப் படுத்துவதுடன், தேவையற்ற கொழுப்பையும், நச்சு தன்மையையும் வெளியேற்றி, சீரான இரத்த ஓட்டத்தையும் எலும்பு மற்றும் தசைகளுக்கு வலுவையும் அளிக்கிறது. மேலும் இயல்புக்கு மாறான நரை, திரை, மூப்பு போன்றவற்றை நீக்கி, நோய்கள் வராமல் தடுக்கும் ஓர் முன்னெச்சரிக்கை சிகிச்சை முறை ஆகும்.
அகம் 32, புறம் 32 என்ற அடிப்படையில் சித்த மருத்துவமானது 32 வகையான உள் மருத்துவ சிகிச்சையையும், 32 வகையான வெளி மருத்துவ சிகிச்சையையும் வெவ்வேறாக பிரித்து வழங்கி, வேறு எந்த மருத்துவத்திற்கும் இல்லாத தனி சிறப்பை பெற்றுள்ளது. அக மருந்துகள் என்பது குடிநீர், மாத்திரை, லேகியம், போன்றவற்றை உள்ளுக்குள் அளிப்பது. புற சிகிச்சை என்பது எண்ணெய் குளியல், எண்ணெய் தொக்கணம், எண்ணெய் மசாஜ், மூலிகை ஒத்தடம், மூலிகை பற்று, மூலிகை வேது, தாரா, நஸ்யம், மூலிகை பொடி திமிர்த்தல், மூலிகை எண்ணை ஒழுக்கு, மூலிகை கட்டு, போன்றவற்றை வெளிப்புறமாக அளிப்பது. உடலின் மூட்டுகள் மற்றும் தசைகளில் ஏற்படக்கூடிய வீக்கம் மற்றும் வலிகளை போக்குதல், மூட்டு திசுக்கள் மற்றும் முதுகெலும்பிற்கு எண்ணெய் பசையை அதிகரிக்க செய்து தேய்மானத்தை தடுப்பது இதன் முக்கிய பயனாகும். மேலும் வர்ம சிகிச்சை என்பது, சில குறிப்பிட்ட வர்ம புள்ளிகளை தூண்டி விடுவதன் மூலம் உடலின் தடைபட்ட உயிர் சக்தியையும், இரத்த ஓட்டத்தையும் சீர் செய்யும் ஓர் தலை சிறந்த மருத்துவ யுக்தியாகும். இந்த சிகிச்சையானது தண்டுவடங்களை சீரமைத்து, நரம்புகளில் ஏற்படும் அழுத்தத்தை விடுவிக்கவும், உடலுக்குள் பிராண வாயுவை பரவச் செய்து நாளமில்லா சுரப்பிகளின் இயக்கத்தை ஒழுங்கு படுத்தவும் பயன்படுகிறது.
முறையான நாடி பரிசோதனை மூலம் ஒவ்வொரு தனி மனிதனின் உடல் நிலையை நன்கு ஆராய்ந்து நமது மருத்துவமனையிலேயே தயாரிக்கப்படும் மருந்துகளை அளிப்பது எமது சிறப்பம்சமாகும். இங்கு பயன்படுத்தப்படும் மருந்துகளின் பார்முலாக்கள் அனைத்தும் பழமை வாய்ந்த மருத்துவ ஓலைச்சுவடிகளில் இருந்தும், பாரம்பரிய வைத்தியர்களின் மருத்துவ குறிப்புகளில் இருந்தும் முறையான ஆய்வுக்குப்பின் தேர்தெடுக்கப் பட்டவை. அரிய மூலிகைகளை அடையாளம் காணவும், கலப்படமற்ற கடை சரக்குகளை (அங்காடி மருந்துகளை) தேர்ந்தெடுக்கவும், திறன் மிக்க பரம்பரை வைத்தியர்களின் துணையுடனும், மருந்து தாவரவியல் மற்றும் மருந்து அறிவியல் போன்ற துறை சார்ந்த வல்லுனர்களின் ஆலோசனைகளுடன், நமது மருத்துவரின் நேரடி மேற்பார்வையில் மருந்துகள் தயாரிக்கப்படுகிறது. எனவே அவைகள் உயர்ந்த தரமும், வீரியமும், மிகுந்த பலனும் மிக்கவையாக விளங்குகிறது. 100% பின் விளைவுகள் மற்றும் பக்க விளைவுகளற்ற இந்த சித்த மருந்துகளால் நோய்கள் நீங்கி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கப்படுவதால் மீண்டும் நோய்கள் அணுகாமல் தடுக்கப்படுகிறது.
இயற்கையோடு இணைந்து பல நூறு ஆண்டுகள் வாழ்ந்த சித்தர்களும், யோகிகளும், ஞானிகளும் தன்னுடைய தவ வலிமையாலும், மெய்ஞானத்தாலும் உணரப்பட்டு பின்பற்றிய அறிவியல் அடிப்படையிலான வாழ்வியல் கோட்பாடுகளை பயிற்றுவிப்பது இதன் சிறப்பம்சமாகும். வாத, பித்த, கப மாறுபாடுகளை நிவர்த்திக்கும் உணவு முறைகள், ஒவ்வொரு தனி மனிதனின் உடல் நிலைக்கேற்ற உடற்பயிற்சிகள், மன அழுத்தத்தையும், சோர்வையும் நீக்கி, அமைதியும், ஆற்றலும் மிக்க மனதை பெறுவதற்கு சித்தர்களின் ஆன்மீக வழிகாட்டுதலும் பரிந்துரைக்க படுகிறது. இதன் மூலம் நவீன வாழ்வியல் மாற்றத்தால் ஏற்படுகின்ற உடல் உபாதைகள் தடுக்கப்படுவதுடன், உடல், மனம், ஆன்மா இவைகளின் ஆற்றல் அதிகரிக்கப் பட்டு நோய்கள் திரும்ப வராமல் பாதுகாக்கப் படுகிறது.
புகைப்படதொகுப்பு
எங்கள் மருத்துவமனை காட்சி
OUR OFFICIAL PARTNERS
Collaborating partners providing integrated care and services
medicate
01
Partner 1

There are many variations of passages Lorem Ipsum available

medicate
02
Partner 2

There are many variations of passages Lorem Ipsum available

முன்பதிவு
முன்பதிவுக்காக உங்கள் விவரங்களை பகிரவும்

    எங்கள் பயணம்
    இந்திய மருத்துவத் துறையில் 29+ ஆண்டுகளாக சிறந்த சேவை

    எங்கள் சித்த நிபுணர்கள், வர்மா சிறப்புச் செயலாளர்கள், கைப்பதிவு ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் தமிழ் பண்டிதர்கள் குழுவினர், தலைமை மருத்துவர் திரு. எஸ். ராமசாமி பிள்ளையார் தலைமையில், காலப்போதைய கைப்பதிவுகளில் வழங்கப்பட்ட தகவல்களை நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துடன் விரிவாக ஆய்வு செய்துள்ளனர்.

    இந்தியாவில் முதன்முறையாக, எங்கள் ஸ்ரீ ராகவேந்திர மருத்துவமனை 29 ஆண்டுகளாக முழுமையான அர்ப்பணிப்புடன், எந்த விளம்பரமும் இல்லாமல் அனைவருக்கும் சேவை வழங்கி, உலகளாவிய புகழைப் பெற்றுள்ளது. எங்கள் இந்திய சித்த மருத்துவத்தின் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை அடைய வாழ்த்துகிறோம்.

    29
    +
    29
    +

    ஆண்டுகள்

    300
    +
    300
    +

    சித்த மூட்டைகள்

    200
    K+
    200
    K+

    மகிழ்ந்த நோயாளிகள்

    OUR PATIENTS
    Patient stories of care, healing, and satisfaction.
    எங்கள் வலைப்பதிவு
    ஆரோக்கியம் மற்றும் நலத்திற்கான பார்வைகள் மற்றும் குறிப்புகள்