இதய நோய் மேலாண்மை

திடீரென்று ஏற்படக்கூடிய விபத்துகளை போன்று சமீப காலமாக இதய நோய்கள் ஏற்பட்டு வருகின்றன. இது வயதானவர்கள் மட்டுமின்றி, இளம் வயதினரின் மனதிலும் அச்சத்தையும், கேள்வியையும் எழுப்ப தொடங்கியுள்ளது. முற்காலத்தில் வயதானவர்களை மட்டுமே பாதித்த இதய நோய்கள் தற்போது ஆண், பெண், இளம் வயதினர் போன்ற அனைத்து தரப்பினரையும் பாதிப்படைய செய்துள்ளது. முறையற்ற உணவு பழக்கம், இரவு கண் விழித்தல், உடல் பருமன், உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம், தூக்கமின்மை, அதிக கவலை போன்றவைகள் இதய நோய்களுக்கான பொதுவான காரணமாக அமைகின்றன. முறையான மருத்துவம் மேற்கொண்டும், அறுவை சிகிச்சை மேற்கொண்டும் முழு பலனுடன் இயல்பாக வாழ்வது இயலாத காரியமாக உள்ளது. எனவே நோய்கள் வருவதற்கு முன்பே அவற்றை தடுப்பதற்கான ஓர் நல்ல மார்க்கத்தை பின்பற்ற வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. இதயத்தின் ஆரோக்கியத்தை வலுப்படுத்தி, இதய நோய்கள் வராமல் தடுப்பதற்கும், மருந்துகளின் தேவையை குறைத்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் சித்தா, ஆயுர்வேதா வர்மா போன்ற இந்திய மருத்துவ முறைகளை ஒருங்கிணைத்து, உருவாக்கப் பட்ட சிகிச்சை தான் நமது இதய நோய் மேலாண்மை சிகிச்சை.

அனைத்து நலவாழ்வு சிகிச்சைகளை அறிந்து கொள்ள:
காய கற்ப சிகிச்சை | நீரிழிவு மேலாண்மை | இதய நோய் மேலாண்மை | உடல் பருமன் மேலாண்மை | பெண்களுக்கான நலவாழ்வு | குடல் குளியல் சிகிச்சை

அளிக்கப்படும் முக்கிய சிகிச்சைகள்

  • தொக்கணம் மற்றும் வர்ம மசாஜ்
  • அபியங்கம் (மூலிகை எண்ணெய் மசாஜ்)
  • மூலிகை நீராவி குளியல், மூலிகை தண்டுவட குளியல்
  • சிரோதாரா, சிரோவஸ்தி, யுரோவஸ்தி
  • பிண்ட ஸ்வேதனம் (நவரை கிழி)
  • பிழிச்சல் (மூலிகை எண்ணெய் குளியல்)
இவற்றுடன் இதயத்தை பலப்படுத்தக்கூடிய மூலிகை மருந்துகள், இரத்தத்தில் தேவையற்ற கொழுப்பை நீக்கி, இரத்த ஓட்டத்தை அதிகரிக்க கூடிய சித்த மருந்துகள், இவற்றுடன் முறையான உடற்பயிற்சி மற்றும் சித்த மருத்துவம் அறிவுறுத்தும் உணவு பரிந்துரைகள்.
 

முக்கிய பயன்கள்

  • இதய நோய்க்கு முக்கிய காரணமாக விளங்கக்கூடிய இரத்தத்தின் நச்சு தன்மையை நீக்கி, கொழுப்பின் அளவை நெறிப்படுத்தி, இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதை தடுப்பதற்கு உதவுகிறது.
  • மறைமுக காரணங்களான மனஅழுத்தம், மனஎழுச்சி, தூக்கமின்மை போன்றவற்றுடன் வாத, பித்த, கபத்தின் தன்னிலை மாறுபாடுகளை சீராக்கி, இதயத்தின் செயல்பாட்டினை மேம்படுத்துகிறது.
  • ஆங்கில மருந்துகளை உட்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்கள் கூட அவற்றை நிறுத்தாமல், அதனுடன் இணைந்து இந்த பாதுகாப்பான, பின் விளைவுகளற்ற சிகிச்சையை மேற்கொண்டு அதிக பலனை அடையலாம்.

    “முதன்மை மருத்துவர் அல்லது உதவி மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகு மட்டுமே சிகிச்சை வழங்கப்படும்.”.